|
அரசியல் பிரிவு: வருகின்ற ஹஜ் பெருநாள் தினத்தை முன்னிட்டு ஈரான் பாராளுமன்றத்தின் மேன்மதங்கிய சபாநாயகர் அலீ லரிஜானீ முஸ்லிம் நாடுகளின் பாராளுமன்ற சபாநாயகர்களுக்கு வாழ்த்துச் செய்திகளை அனுப்பி வைத்துள்ளார்.
ஹஜ் பெருநாள், இறைவனுக்கு முற்றுமுழுதாக அடிபணிவதன் வெளிப்பாடுகளை மிக அழகாககச் சித்தரிக்கும் ஒரு நிகழ்வாகும் என அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.
'யுத்தம், பிரிவினை, வறுமை போன்ற பல்வேறு இன்னல்களால் துவண்டு போhயுள்ள முஸ்லிம் சமுதாயத்துக்கு இறைவனது கருணையினதும் வழிகாட்டலினதும் கதவுகள் இத்திருநாளில் திறந்துகொள்ளும் என நாம் நம்புகின்றோம். உலக முஸ்லிம்கள் தமக்கிடையேயான ஒத்துழைப்பு விடயத்தில் விவேகமாக நடந்து குறிப்பாக பலஸ்தீன மக்களுக்கு தம் ஆதரவை வழங்கி தமது ஒருமைப்பாட்டையும் ஐக்கியத்தையும் வளர்த்துக் கொள்ள முனவர வேண்டும்' எனவும் அச்செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
500358
|