|
சர்வசேத குழு: வெவ்வேறு நாடுகளிலிருந்து தருவிக்கப்பட்ட கண்கவர் வடிவமைப்பில் பதிப்பக்கப்பட்டிருந்த குர்ஆன் பிரதிகள், கட்டாரின் டோஹாவில் இடம்பெற்ற சர்வதேச புத்த விற்பனையின் போது பெரும் வரவேற்பைப் பெற்றன.
கட்டார் செய்தி ஸ்தாபனத்தின் தகவலின்படி, துருக்கியில் பதிப்பிக்கப்பட்ட புனித அல்குர்ஆன் பிரதிகளுடன், அல்இஹ்சான் வெளியீட்டகத்தினால் வெளியிடப்பட்ட குர்ஆன் பிரதிகளும் இக்கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
ஈரானிய வெளியீட்டு நிறுவனங்களினால், குர்ஆன் பிரதிகளும் சமய நூல்கள் பலவும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. அவற்றுடன், ஆசிய ஐரோப்பிய கலைஞர்களினால் உருவாக்கப்பட்ட பெறுமதியான ஆக்கங்களும் அங்கு வைக்கப்பட்டிருந்தன.
அத்துடன் ஜேர்மன் மற்றும் இந்தியாவிலிருந்து வரவழைக்கப்பட்டிருந்த அற்புதமான வடிவமைப்புக் கொண்ட இரு குர்ஆன் பிரதிகளும் அங்கு இருந்தன.
இப்புத்தக விற்பனை, 24 நாடுகளிலிருந்து வருகை தந்த 357 வெளியீட்டு நிறுவனங்களின் பங்களிப்புடன் டிசம்பர் 30ம் திகதி திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
518896
|