کد خبر: 1289284
تاریخ انتشار : ۲۶ شهريور ۱۳۹۲ - ۰۸:۱۶

சிரியாவில் தீவிரவாதிகளின் அல்குர்ஆன் அவமதிப்பு நடவடிக்கை

சிரியாவிலுள்ள ஆயுதம் தாங்கிய தீவிரவாதிகள், தமது இஸ்லாமிய எதிர்ப்புச் செயலின் ஒரு பகுதியாக புனித அல்குர்ஆனை அவமதிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.



இத்தீவிரவாத குழுக்கள், மக்சர் அல்ஹிஸ்ஸான் கிராமத்திலுள்ள பள்ளிவாயல்களுக்குத் தீ வைத்ததுடன், அங்கிருந்த புனித அல்குர்ஆன் பிரதிகளையும் எரித்து நாசம் செய்துள்ளதாக அல்மினார் வலையமைப்பு தெரிவிக்கின்றது.



சில தினங்களுக்கு முன்பு இடம்பெற்ற இம்மோசமான அவமதிப்புச் செயல், தற்போது இணையத்தளங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.



முஸ்லிம் புனிதஸ்தலங்களை அவமதிப்புச் செய்தது மட்டுமன்றி, மஸ்கர் அல்ஹிஸ்ஸான் கிராமவாழ் மக்களையும் தீவிரவாதிகள் கொன்றுள்ளனர்.



சிரியாவில் ஆயுதம் தரித்த தீவிரவாதிகள் அல்குர்ஆனை அவமதிப்புச் செய்வது இது முதற்தடவையல்ல. சில மாதங்களுக்கு முன்பு, டீர் எஸ்ஸூர் எனும் நகரத்திலுள்ள பள்ளிவாயலொன்றினுள் அத்துமீறி நுழைந்த அத்தீவிரவாதிகள் குர்ஆன் பிரதிகளை கால்களின் கீழ் போட்டு மிதித்ததுடன் பள்ளிவாயல்களையும் சுவர்களையும் அசுத்தப்படுத்தியிருந்தனர்.



மிக அண்மையில், அல்காயிதாவுடன் இணைக்கப்பட்டுள்ள அல்நுஸ்ரா தீவிரவாதிகள் குழு, டமஸ்கஸ் நகருக்கு அருகிலுள்ள கிறிஸ்தவ தேவாலயத்தினுள் நுழைந்து அங்கிருந்த கன்னி மேரி அவர்களது நினைவுச் சின்னத்தையும் களங்கப்படுத்தியுள்ளனர்.



1288612

captcha