کد خبر: 1301518
تاریخ انتشار : ۲۰ مهر ۱۳۹۲ - ۰۸:۵۴

ஸஹாபாக்களை அவமதிப்பது அஹ்லுல்பைத்தின் போதனைகளுக்கு எதிரானது

நபி (ஸல்) அவர்களின் தோழர்களான ஸஹாபாக்களை அவமதிப்பது அஹ்லுல்பைத்தின் போதனைகளுக்கு எதிரானது என சிரேஷ்ட ஷீஆ அறிஞர் தெரிவித்துள்ளார்.



ஷீஆ சமுதாயத்தைச் சேர்ந்த சிலர் ஸஹாபாக்களை அவமதிக்கும் வகையில் நடந்து கொள்வதற்கு சிரேஷ்ட ஆயத்துல்லாஹ் அலி அல்சீஸ்தானி கண்டனமும் தெரிவித்துள்ளார்.



இஸ்லாமிய கிலாபத்தின் இரண்டாம் கலீபான உமர் கத்தாப் மற்றும் நபிகளாரின் மனைவி அன்னை ஆயிஷா ஆகியோரை அவமதிக்கும் வகையிலான செயற்பாடுகள் தொடர்பாக மார்க்கத் தீர்ப்பொன்றை சில சகோதரர்கள் கோரிய போது, மேற்கண்ட பதிலைக் குறிப்பிட்ட ஆயத்துல்லாஹ் அவர்கள், இத்தகைய செயல் பரிசுத்த அஹ்லுல்பைத் இமாம்களின் போதனைகளுக்கும் சீறாவுக்கும் எதிரானது என்றார்.



அண்மையில் ஸஹாபாக்களுக்கு எதிராக சுலோகங்களைக் கோஷித்தவர்களைக் கைது செய்யுமாறு ஈராக்கிய பிரதமர் நூரி அல்மலிகி கட்டளை பிறப்பித்துள்ளார்.



ஈராக்கின் ஷீஆ அறிஞர் முக்ததா அல்சத்ர் அவர்களும் ஸஹாபாக்களை அவமதிக்கும் செயற்பாடுகளைக் கண்டித்துள்ளதுடன் இத்தகைய செயல் ஈராக் மக்களிடையே வேற்றுமையையும் முரண்பாடுகளையும் தோற்றுவிக்கக் கூடிய சதி எனவும் குறிப்பிட்டுள்ளார்.



ஈராக்கின் ஷீஆ பிரதமர், சுன்னி சமூகத்தின் புனிதத்துவங்களைப் பாதுகாப்பதில் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வரும் போதிலும், ஈராக்கில் ஷீஆக்கள் படுகொலை செய்யப்படுவது தொடர்பாக எத்தகைய கண்டனமும் தெரிவிக்காது சுன்னி உலகத் தலைவர்கள் மௌனம் சாதித்து வருகின்றனர். மற்றும் சிலர் இத்தகைய படுகொலைகளை ஊக்குவித்தும் வருகின்றனர்.



1301261

captcha